புதிய ரேஷன் கார்டு வாங்க போறீங்களா? இந்த ஆவணம் ரொம்ப முக்கியம் -அரசு அதிரடி அறிவிப்பு!! New Ration Card Apply Rules State Govt Announced 2024
புதிய ரேஷன் கார்டு வாங்க போறீங்களா? இந்த ஆவணம் ரொம்ப முக்கியம் -அரசு அதிரடி அறிவிப்பு!!
New Ration Card Apply Rules State Govt Announced 2024
New Ration Card Apply Rules State Govt Announced 2024 புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் அனைவரும் ஆதார் கார்டு இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது என்று கர்நாடக மாநில அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
![New Ration Card Apply Rules State Govt Announced 2024](http://guideinfo.in/wp-content/uploads/2024/03/New-Ration-Card-Apply-Rules-State-Govt-Announced-2024.png)
கர்நாடக மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதை பற்றிய விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.
ரேஷன் கார்டுகளை திருத்தம் செய்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் பணி கர்நாடக மாநிலத்தில் தொடங்கியுள்ளது. சட்டசபை தேர்தல் காரணமாக இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மாநில அரசால் செயல்படுத்தப்படும் அன்ன பாக்கிய யோஜனா மற்றும் அனைத்து அரசு திட்டங்களிலும் பயன் பெற்றுக்கொள்ள முக்கியமாக ஒரு அமைப்பாக ரேஷன் கார்டு உள்ளது. எனவே அன்ன பாக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அரிசி மற்றும் மக்காச்சோளம் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு
ரேஷன் கார்டு வாங்குவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ரேஷன் கார்டு பெற விரும்புவோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று பெங்களூர் ஒன், கன்னடா ஒன், ஜனசினகி கேந்திரா, கிராம பஞ்சாயத்து, பி ஓ எஸ் அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஐந்து வயதுகள் உட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் வேண்டும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பயோமெட்ரிக் தேவையில்லை அவரின் ஆதார் அட்டை இருக்க வேண்டும்,
அனைத்து விவரங்களும் சரிப்பார்க்கப்பட்ட பின்பு தான் ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலமாக கார்டு வழங்கப்படும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 40 நாட்களில் பணிகள் முடிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது .
எனவே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் அனைவரும் ஆதார் கார்டு இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது என்று கர்நாடக மாநில அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.