CAA சட்டம் அமலுக்கு வந்தது!! CAA பற்றிய முழு விவரம்- மத்திய அரசு அறிவிப்பு!! CAA Act Notifies Central Govt Announced Tamil
CAA சட்டம் அமலுக்கு வந்தது!! CAA பற்றிய முழு விவரம்- மத்திய அரசு அறிவிப்பு!!
CAA Act Notifies Central Govt Announced Tamil
CAA Act Notifies Central Govt Announced Tamil மத்திய அரசானது நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது இது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசு அரசுகளில் வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலையில் தற்போது 2019 சி ஏ ஏ செயல்படுவதற்கான விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
![CAA Act Notifies Central Govt Announced Tamil](http://guideinfo.in/wp-content/uploads/2024/03/CAA-Act-Notifies-Central-Govt-Announced-Tamil.png)
இதில் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இருந்து ஆவணமற்ற முஸ்லிமல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக வழி வகுத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டம் படம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி உடைய ஒப்புதலை பெற்றது. ஆனால் அதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலிருந்து போராட்டங்கள் நடந்து வந்தன. இதுவரை விதிகள் அறிவிக்கப்படாததால் இச்சட்டம் அவளுக்கு வராமல் இருந்தது. தற்போது இதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது
நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வதென்ன ?
அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு சிஏஏ குடியுரிமை அளிக்கும்.
2014 டிசம்பர் 31க்குள் குடியேறிய இந்துகள், சீக்கியர், பௌத்தர், சமணர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேறலாம்.
இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே ஆவணங்கள் இல்லையென்றாலும் குடியுரிமையை பெறலாம்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர், இலங்கை அகதிகளுக்கு சிஏஏ-ன் கீழ் குடியுரிமை பெற அனுமதியில்லை.